search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புனித அல்போன்சா"

    • சிறப்பு விருந்தினராக நாஞ்சில் கல்வி குழுமங்களின் நிறுவனர் ஜோஸ் ராபின்சன் கலந்துகொண்டார்.
    • ஏற்பாடுகளை கல்லூரி ஐக்யூஎசி அங்கத்தினர் செய்திருந்தனர்.

    கருங்கல்:

    கருங்கல் அருகே உள்ள சூசைபுரம் புனித அல்போன்சா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலை மாணவ, மாணவிகளின் ஆளுமைத்திறன்களை வளர்த்திடும் பொருட்டு ஐக்யூஎசி சார்பாக ஆளுமைத்திறன் வளர் பயிலரங்கம் நடைபெற்றது. கல்லூரி தாளாளர் மற்றும் செயலர் ஆன்றனி ஜோஸ் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் மைக்கேல் ஆரோக்கியசாமி, வளாக வழிகாட்டி அஜின் ஜோஸ், துணை முதல்வர் சிவனேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    பயிலரங்கில் சிறப்பு விருந்தினராக நாஞ்சில் கல்வி குழுமங்களின் நிறுவனர் ஜோஸ் ராபின்சன் கலந்துகொண்டார். இயல்பிலேயே இருக்கும் தங்கள் திறமைகளை மாணவர்கள் எவ்வாறு அடையாளம் கண்டு கொள்வது, கண்டு கொண்ட திறமைகளை எவ்வாறு வளர்த்துக்கொள்வது, தங்கள் திறன்களை வளர்த்து கொள்ளும் முறைகள், பயிற்சி, தேடல் குறித்தும், மாறி வரும் சமூகத்தில் வேலை வாய்ப்பிற்கு அத்திறன்கள் எவ்வாறு பயன்படும் என்பது குறித்தும், பயிற்சி அளித்தார். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி ஐக்யூஎசி அங்கத்தினர் செய்திருந்தனர்.

    • மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிலரங்கம் நடைபெற்றது
    • மாணவர்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்வதன் முக்கியத்துவம்

    நாகர்கோவில் : கருங்கல் சூசைபுரம் புனித அல்போன்சா கலை மற்றும் அறிவியல் கல்லுரியின் வணிகவியல் துறை சார்பில் வணிகவியல் மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிலரங்கம் நடைபெற்றது. இளையோர் திறன் மேம்பாட்டு என்ற தலைப்பில் நடைபெற்ற இப்பயிலரங்கில் கல்லூரி தாளாளர் மற்றும் செயலர் ஆன்றனி ஜோஸ் தலைமை உரையாற்றினார்.

    கல்லூரி முதல்வர் மைக்கேல் ஆேராக்கியசாமி வாழத்துரை வழங்கினார். துைண முதல்வர் சிவனேசன் சிறப்பு விருந்தினராக அறிமுகம் செய்து வைத்தார். இதில் சிறப்பு விருந்தினராக சென்னை லயோலா கல்லூரி வணிக வியல் துறை பேராசிரியர் மதன்குமார் கலந்து கொண்டு மாணவர்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்வதன் முக்கியத்துவம் குறித்து விளக்கி பேசி, பயிற்சி குறிப்பேடுகளை வழங்கி பயிற்சி அளித்தார். இதில் வணிகவியல் துறை மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை வணிகவியல் துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஒருங்கிணைந்து நடத்தினர்.

    • முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமையில் நடந்தது
    • புனித அல்போன்சா சிறப்பு நவநாளும் தொடர்ந்து திருப்பலியும் கொடியிறக்கமும் நடைபெறுகிறது.

    நாகர்கோவில் :

    கேரளாவில் பரணங்ஙானம் என்ற இடத்தில் தூய அருட்சகோதரியாக வாழ்ந்த அல்போன்சா 1946-ம் ஆண்டு ஜூலை மாதம் 28-ந்தேதி தனது 36-வது வயதில் விண்ணகம் சென்றார். அவரைத் திருத்தந்தை 16-ம் பெனடிக்ட் 2008-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 12-ந்தேதி புனிதையாக பிரகடனப்படுத்தினார். அவரின் திருப்பெயரை தாங்கிய தமிழ்நாட்டில் முதல் திருத்தலமாக விளங்குவது நாகர்கோவில் புனித அல்போன்சா திருத்தலமாகும்.

    இத்திருத்தல திருவிழா கடந்த 21-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. திருவிழாவின் 8-ம் நாள் அல்போன்சா விண்ணகம் சென்ற நாளானதால் அதனை சிறப்பிக்கும் பொருட்டுக் கோட்டாறு மறைமாவட்ட முன்னாள் மேதகு ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடைபெற்றது. இவர்களோடு இணைந்து இத்திருவிழா திருப்பலியை தக்கலை மறைமாவட்ட குருகுல முதல்வர் பேரருட்தந்தை தாமஸ் பவுவத்துப்பறம்பில் அருட்தந்தை ஜாண் கென்னடி, அருட்தந்தை டைனிசியஸ், அருட்தந்தை செல்வராஜ், அருட்தந்தை அருளப்பர், அருட்தந்தை யுஜின், அருட்தந்தை மரிய சூசை வின்சென்ட், அருட்தந்தை அமலநாதன், அருட்தந்தை தார்சியுஸ், அருட்தந்தை குருசுகார்மேல், அருட்தந்தை செல்வராஜ், அருட்தந்தை டினு சி.எம்.ஐ., அருட்தந்தை மத்தேயு அறைக்கபலம் சி.எம்.ஐ. ஆகியோர் நிறைவேற்றினர். இத்திருவிழா திருப்பலியில் சாந்திதான் குழுவினர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

    திருவிழாவின் 10-ம் திருவிழா நாளை (30-ந்தேதி) நடைபெறுகிறது. அன்றைய தினம் இடுக்கி மறைமாவட்ட ஆயர் ஜாண் நெல்லிக்குந்நேல் தலைமையில் ஆடம்பர கூட்டுத்திருப்பலியும் தொடர்ந்து புனித அல்போன்சா திருத்தேர்ப்பவனியும் நேரச்சை விருந்தும் நடைபெறுகிறது. மாலை 4 மணிக்கு புனித அல்போன்சா சிறப்பு நவநாளும் தொடர்ந்து திருப்பலியும் கொடியிறக்கமும் நடைபெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை நாகர்கோவில் புனித அல்போன்சா திருத்தல பங்குத்தந்தை பேரருட்தந்தை சனில் ஜாண் பந்திச்சிறக்கல் மற்றும் துணை பங்குத்தந்தை அருட்தந்தை ஜார்ஜ் கண்டத்தில் ஆகியோராலும் மற்றும் விழாக்குழு தலைவர் அகஸ்டின் தறப்பேல், கைக்காரர்களான முனைவர் ராஜையன் மற்றும் ஜோ பெலிக்ஸ் மலையில் ஆகியோர் திருத்தல பங்கு மக்களோடு இணைந்து செய்து வருகின்றனர்.

    • விழா நாட்களில் தினமும் ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடக்கிறது.
    • 30-ந்தேதி கொடியிறக்கம் நடக்கிறது.

    நாகர்கோவில் புனித அல்போன்சா திருத்தலம் ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கி வருகிற 30-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி விழாவின் முதல் நாளான நேற்று மாலை 6 மணிக்கு தக்கலை மறைமாவட்ட குருகுல முதல்வர் தோமஸ் பெவ்வத்துபறம்பில் திருவிழா கொடியை ஏற்றி திருப்பலி நிறைவேற்றினார்.

    பெரியகாடு புனித அந்தோணியார் ஆலய பங்குதந்தை சாம் மாத்யூ மறையுரையாற்றினார். புனித அல்போன்சா சிறப்பு நவநாள் தக்கலை மறை மாவட்ட ஆவண காப்பாளர் ஜோஷி குளத்திங்கல் ஜெபித்தார். புன்னையடி புனித லூர்து அன்னை ஆலய பங்குதந்தை சதீஷ்குமார் ஜாய், மேலபெருவிளை புனித ஜெபமாலை அன்னை ஆலய பங்குதந்தை குரூஸ்கார்மல், தக்கலை மறை மாவட்ட பொருளாளர் ஜோண்சிலாஸ், தக்கலை புலரி அச்சக மேலாளர் வினு ஜோசப் ஆகியோர் இணைந்து திருவிழா கூட்டுத்திருப்பலி நிறைவேற்றினர். விழா நாட்களில் தினமும் காலை 6 மணிக்கு திருப்பலி, மாலை 6 மணிக்கு புனித அல்போன்சா சிறப்பு நவநாள், 6.30 மணிக்கு ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடக்கிறது.

    விழாவின் 28-ந்தேதி மாலை 6.30 மணிக்கு கோ ட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமை தாங்கி ஆடம்பர கூட்டுத்திருப்பலி நிறைவேற்றுகிறார். 29-ந்தேதி மாலை 6.30 மணிக்கு படந்தாலுமூடு திருஇருதய மறைவட்ட ஆலய பங்குதந்தை தோமஸ்நேசன் ஆடம்பர கூட்டுத்திருப்பலியை நிறைவேற்றுகிறார்.

    இரவு 8.30 மணிக்கு தக்கலை மறைமாவட்ட சீனாய் தியான குழு அருட்தந்தை அனில்ராஜ் தலைமையில் நற்கருணை ஆராதனை, நற்கருணை பவனி நடக்கி றது. விழாவில் 30-ந்தேதி காலை 9.30 மணிக்கு இடுக்கி மறைமாவட்ட ஆயர் ஜாண் நெல்லிக்குந்நேல் ஆடம்பர கூட்டுத்திருப்பலியை நிறைவேற்றுகிறார். மதியம் 12.30-க்கு தேர்பவனி, 1.30 மணிக்கு நேர்ச்சை விருந்து, மாலை 4.30 மணிக்கு ஆடம்பர கூட்டுத்திருப்பலி, 6 மணிக்கு கொடியிறக்கம் ஆகியவை நடைபெறுகிறது.

    விழாவுக்கான ஏற்பாடு களை புனித அல்போன்சா திருத்தல பங்குதந்தை சனில் ஜாண் பந்திச்சிறக்கல், துணை பங்குதந்தை ஜார்ஜ் கண்டத்தில், விழாக்குழு தலைவர் அகஸ்டின் தறப்பேல், கைக்காரர்களான ராஜையன், ஜோபெலிக்ஸ் மலையில் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

    • திருவிழா கொடியேற்றத்துடன் தொட ங்கி வருகிற 30-ந்தேதி வரை நடைபெறுகிறது.
    • ஆடம்பர கூட்டுத்திருப்பலி, 6 மணிக்கு கொடியிறக்கம் ஆகியவை நடைபெறுகிறது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் புனித அல்போன்சா திருத்தலம் ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கி வருகிற 30-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    இதையொட்டி விழாவின் முதல் நாளான நேற்று மாலை 6 மணிக்கு தக்கலை மறைமாவட்ட குருகுல முதல்வர் தோமஸ் பெவ்வத்துபறம்பில் திருவிழா கொடியை ஏற்றி திருப்பலி நிறைவேற்றினார்.

    பெரியகாடு புனித அந்தோணியார் ஆலய பங்குதந்தை சாம் மாத்யூ மறையுரையாற்றினார். புனித அல்போன்சா சிறப்பு நவநாள் தக்கலை மறை மாவட்ட ஆவண காப்பாளர் ஜோஷி குளத்திங்கல் ஜெபித்தார். புன்னையடி புனித லூர்து அன்னை ஆலய பங்குதந்தை சதீஷ்குமார் ஜாய், மேலபெருவிளை புனித ஜெபமாலை அன்னை ஆலய பங்குதந்தை குரூஸ்கார்மல், தக்கலை மறை மாவட்ட பொருளாளர் ஜோண்சிலாஸ், தக்கலை புலரி அச்சக மேலாளர் வினு ஜோசப் ஆகியோர் இணைந்து திருவிழா கூட்டுத்திருப்பலி நிறைவேற்றினர். விழா நாட்களில் தினமும் காலை 6 மணிக்கு திருப்பலி, மாலை 6 மணிக்கு புனித அல்போன்சா சிறப்பு நவநாள், 6.30 மணிக்கு ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடக்கிறது.

    விழாவின் 28-ந்தேதி மாலை 6.30 மணிக்கு கோ ட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமை தாங்கி ஆடம்பர கூட்டுத்தி ருப்பலி நிறைவேற்றுகிறார். 29-ந்தேதி மாலை 6.30 மணிக்கு படந்தாலுமூடு திருஇருதய மறைவட்ட ஆலய பங்குதந்தை தோமஸ்நேசன் ஆடம்பர கூட்டுத்திருப்பலியை நிறைவேற்றுகிறார். இரவு 8.30 மணிக்கு தக்கலை மறைமாவட்ட சீனாய் தியான குழு அருட்தந்தை அனில்ராஜ் தலைமையில் நற்கருணை ஆராதனை, நற்கருணை பவனி நடக்கி றது.

    விழாவில் 30-ந்தேதி காலை 9.30 மணிக்கு இடுக்கி மறைமாவட்ட ஆயர் ஜாண் நெல்லிக்குந்நேல் ஆடம்பர கூட்டுத்திருப்பலியை நிறைவேற்றுகிறார். மதியம் 12.30-க்கு தேர்பவனி, 1.30 மணிக்கு நேர்ச்சை விருந்து, மாலை 4.30 மணிக்கு ஆடம்பர கூட்டுத்திருப்பலி, 6 மணிக்கு கொடியிறக்கம் ஆகியவை நடைபெறுகிறது.

    விழாவுக்கான ஏற்பாடு களை புனித அல்போன்சா திருத்தல பங்குதந்தை சனில் ஜாண் பந்திச்சிறக்கல், துணை பங்குதந்தை ஜார்ஜ் கண்டத்தில், விழாக்குழு தலைவர் அகஸ்டின் தறப்பேல், கைக்காரர்களான ராஜையன், ஜோபெலிக்ஸ் மலையில் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

    • திருவிழா நாளை தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது.
    • 30-ந்தேதி ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடக்கிறது.

    நாகர்கோவில் ஏ.ஆர். கேம்ப் சாலையில் புனித அல்போன்சா ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா நாளை மறுநாள்(வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது. இதையொட்டி நாளை மறுநாள் மாலை 6 மணிக்கு புனித அல்போன்சா சிறப்பு நவநாள், 6.30 மணிக்கு தக்கலை மறைமாவட்ட குருகுல முதல்வர் தோமஸ் பெவ்வத்துபறம்பில் திருவிழா கொடியை ஏற்றி வைத்து ஆடம்பர கூட்டுத்திருப்பலியை நிறைவேற்றுகிறார். பெரியகாடு புனித அந்தோணியார் ஆலய பங்குத்தந்தை சாமி மேத்யூ மறையுரையாற்றுகிறார்.

    விழா நாட்களில் தினமும் காலை 6 மணிக்கு திருப்பலி, மாலை 6 மணிக்கு புனித அல்போன்சா சிறப்பு நவநாள், 6.30 மணிக்கு ஆடம்பர கூட்டுத்திருப்பலி ஆகியவை நடைபெறுகிறது.

    விழாவின் 28-ந்தேதி காலை 6 மணிக்கு திருப்பலி, 9 மணிக்கு சூசைபுரம் புனித அல்போன்சா கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருட்தந்தை தலைமையில் புனித அல்போன்சா சிறப்பு நவநாள், திருப்பலி நிறைவேற்றினார். 10.30 மணிக்கு அல்போன்சா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கான சிறப்பு நிகழ்வுகள், மாலை 6 மணிக்கு பேரருட்தந்தை கிறிஸ்துதாஸ் தலைமையில் புனித அல்போன்சா சிறப்பு நவநாள் நடக்கிறது.

    மாலை 6.30 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமை தாங்கி ஆடம்பர கூட்டுத்திருப்பலி நிறைவேற்றுகிறார். இதில் நாகர்கோவில் திரு இருதய ஆலய பங்குத்தந்தை ஜாண் கென்னடி, குழித்துறை மறைமாவட்ட அருட்தந்தை டேவிட் மைக்கிள் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

    29-ந்தே 6 மணிக்கு அருட்தந்தை ஆன்டணி மாடப்புரைக்கல் தலைமையில் புனித அல்போன்சா சிறப்பு நவநாள், 6.30 மணிக்கு படந்தாலுமூடு திரு இருதய மறைவட்ட ஆலய பங்குத்தந்தை தோமஸ் சத்யநேசன் ஆடம்பர கூட்டுத்திருப்பலியை நிறைவேற்றுகிறார். மேலபெருவிளை புனித ஜெபமாலை மாதா ஆலய பங்குத்தந்தை குரூஸ் கார்மல் மறையுரையாற்றினார். இரவு 8.30 மணிக்கு தக்கலை மறைமாவட்ட சீனாய் தியானக்குழு அருட்தந்தை அனில்ராஜ் தலைமையில் நற்கருணை ஆராதனை, நற்கருணை பவனி நடக்கிறது.

    விழாவின் நிறைவு நாளான 30-ந்தேதி காலை 9.30 மணிக்கு இடுக்கி மறைமாவட்ட ஆயர் ஜாண் நெல்லிக்குந்நேல் தலைமை தாங்கி ஆடம்பர கூட்டுத்திருப்பலியை நிறைவேற்றுகிறார். மதியம் 12.30 மணிக்கு தேர்பவனி, 1.30 மணிக்கு நேர்ச்சை விருந்து, மாலை 4.30 மணிக்கு அருட்தந்தைகள் பிரின்ஸ் சேரிப்பனாட்டு ஆடம்பர கூட்டுத்திருப்பலி நிறைவேற்றுகிறார். அருட்தந்தை அஜின் மறையுரையாற்றுகிறார். மாலை 6 மணிக்கு இறக்கம் ஆகியவை நடைபெறுகிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை புனித அல்போன்சா திருத்தல அதிபர் சனில் ஜோண் பந்திச்சிறக்கல், துணை பங்குத்தந்தை ஜார்ஜ் கண்டத்தில், விழாக்குழு தலைவர் அகஸ்டின் தரப்பேல், ராஜையன், ஜோ பெலிக்ஸ் மலையில் மற்றும் பங்கு இறைமக்கள் செய்து வருகிறார்கள்.

    • புனித அல்போன்சா சிறப்பு நவநாள் நடைபெற்றது.
    • தேரானது திருத்தலத்தின் சுற்றுவட்டார பகுதிகளில் பவனி வந்தது.

    நாகர்கோவில் ஏ.ஆர்.கேம்ப் சாலையில் அமைந்துள்ள புனித அல்போன்சா திருத்தலத்தில் 10-ம் நாள் திருவிழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு தக்கலை மறைமாவட்டத்தின் பல்வேறு பங்குகளில் இருந்து அருட்பணியாளர்கள், அருட்சகோதரிகள், பங்கு மக்கள் புனித பயணமாக அல்போன்சா திருத்தலத்திற்கு வருகை தந்தனர்.

    விழாவில் காலை 9 மணிக்கு தக்கலை மறைமாவட்ட குருகுல முதல்வர் பேரருட்தந்தை தோமஸ் பெவ்வத்துபறம்பில் தலைமையில் புனித அல்போன்சா சிறப்பு நவநாள் நடைபெற்றது. 9.30 மணிக்கு தக்கலை மறைமாவட்ட ஆயர் மார் ஜார்ஜ் ராஜேந்திரன் தலைமையில் கூட்டுத்திருப்பலி நடந்தது. தொடர்ந்து பகல் 12.30 மணிக்கு தேர்பவனி நடைபெற்றது. தேரானது திருத்தலத்தின் சுற்றுவட்டார பகுதிகளில் பவனியாக வந்தது.

    மதியம் 1.30 மணிக்கு நேர்ச்சை விருந்து, புனித அல்போன்சா சிறப்பு நவநாள், ஆடம்பர கூட்டு திருப்பலி, திருக்கொடி இறக்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை திருத்தல அதிபர் பேரருட்தந்தை சனில் ஜோண் பந்திச்சிறக்கல், துணை பங்குத்தந்தை டோஜி செபாஸ்டின் தலைமையில் பங்கு மக்கள் செய்திருந்தனர்.

    • விழா நாட்களில் திருப்பலி, மறையுரை, சிறப்பு நவநாள், நற்கருணை போன்றவை நடைபெறும்.
    • வருகிற 31-ந் தேதி வரை விழா நடைபெற உள்ளது.

    நாகர்கோவில் ஏ.ஆர்.பி. கேம்ப் ரோட்டில் புனித அல்போன்சா திருத்தல ஆலயம் உள்ளது. இந்த ஆலய 10 நாள் திருவிழா நாளை (22-ந் தேதி) தொடங்குகிறது. வருகிற 31-ந் தேதி வரை விழா நடைபெற உள்ளது. விழாவின் முதல் நாளில் மாலை 6 மணிக்கு முதல் புனித அல்போன்சா சிறப்பு நவநாள், 6.30 மணிக்கு கொடியேற்றம் போன்றவை நடக்கிறது. இரவு 7 மணிக்கு கூட்டுத்திருப்பலி, மறையுரை நடைபெறும். தக்கலை மறை மாவட்ட குருகுல முதல்வர் தோமஸ் பவுவத்துப்பறம்பில் தலைமை தாங்கி திருப்பலி நிறைவேற்றுகிறார். புன்னைநகர் புனித லூர்து அன்னை ஆலய பங்குத் தந்தை சதீஷ்குமார் ஜாய் மறையுரையாற்றுகிறார்.

    தொடர்ந்து வருகிற விழா நாட்களில் திருப்பலி, மறையுரை, சிறப்பு நவநாள், நற்கருணை போன்றவை நடைபெறும். 24-ந்தேதி காலை 7.30 மணிக்கு அருட்பணி யாளர் ஜோஜி மரங்காட் தலைமையில் ராசாத் திருப்பலி நடக்கிறது. 27-ந்தேதி காலை 10 மணிக்கு அல்போன்சா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கான சிறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. 28-ந்தேதி மாலை 6.30 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் ஆடம்பர கூட்டு திருப்பலி நடக்கிறது. 29-ந் தேதி பங்கு த்தந்தை ஜஸ்டின் செறுவேலில் தலைமையிலும், மறுநாள் (30-ந்தேதி) பங்குத்த ந்தை தோமஸ் தெக்கேதல தலைமை யிலும் ஆட ம்பர கூட்டுத் திருப்பலி நடைபெறுகிறது.

    விழாவின் இறுதி நாளான 31-ந் தேதி தக்கலை மறை மாவட்ட அருட்பணி யாளர்கள், அருட்சகோதரிகள் மற்றும் பல்வேறு பங்கு களில் இருந்து வரும் பங்குமக்கள் புனித அல்போன்சா திருத்தலம் நோக்கி புனித பயணம் செல்கிறார்கள். அன்று காலை 9 மணிக்கு புனித அல்போன்சா சிறப்பு நவநாள், 9.30 மணிக்கு ஆயர் மார் ஜார்ஜ் ராஜேந்திரன் தலைமையில் ஆடம்பர கூட்டுத் திருப்பலி போன்றவை நடக்கிறது.

    மதியம் 12.30 மணிக்கு தேர்ப்பவனி, 1.30 மணிக்கு நேர்ச்சை விருந்து, மாலை 4 மணிக்கு திருப்பலி போன்றவையும் நடைபெறும். மறையுரைக்குப் பின்னர் திருக்கொடி இறக்கப்படுகிறது. விழா நாட்களில் தினசரி மாலை திருப்பலி முடிந்தவுடன் அருகில் உள்ள ஊர்களுக்குச் செல்ல பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. திருவிழா ஏற்பாடுகளை திருத்தல அதிபர் அருட்பணி யாளர் சனில் ஜோண் பந்திச் சிறக்கல், துணை பங்குதந்தை டோஜி செபாஸ்டின் கொழு வக்கண்டத்தில், விழாக்குழு தலைவர் அகஸ்டின் தறப் பேல், ராஜையன், ஜோ பெலிக்ஸ் மலையில் மற்றும் பங்குமக்கள் செய்து வருகிறார்கள்.

    ×